search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி விசாரணை"

    ஆசிரியருக்கு மாணவர் ஒருவர் மசாஜ் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்த உள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை அரசு பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் இளங்கோ. இவருக்கு மாணவர் ஒருவர் மசாஜ் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து ஆசிரியரிடம் கேட்டபோது கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் நடந்த கலை விழா நிகழ்ச்சியில் ஒத்திகைக்காக இது எடுக்கப்பட்டது என தெரிவித்தார். மசாஜ் செய்த மாணவன் சூர்யாவிடம் இது குறித்து கேட்டபோது, ரெங்கராஜ் என்ற தமிழாசிரியர் வீடியோ எடுத்து வெளியிட்டதாக கூறினான்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தனர். புதிய முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்றுள்ளதால் அவர் முறைப்படி விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×